×

7 பேரை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

விருதுநகர்,பிப்.25:  ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை  செய்யக்கோரி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள்  கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ் முருகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : release ,
× RELATED சித்திரை திருவிழாவிற்காக மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு