×

நிரந்தர வேலை வழங்க கோரி மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம்

விருதுநகர்,பிப்.25:  விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சாத்தூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி சரவணன் தரையில் அமர்ந்து நிரந்தர வேலை வழங்க கோரி தர்ணா போராட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிளஸ் 2 முடிந்துள்ள நிலையில் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு அலுவலக உதவியாளர் வேலையை ரூ.1,500 ஊதியத்தில் வேலை செய்து வந்தேன். அந்த சொற்ப ஊதியமும் எனது பெயரில் வழங்காமல் துப்புரவு பணி என்ற பெயரில் வேறு நபரின் பெயரில் வழங்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்துள்ள நிலையில் நிரந்தர வேலை கோரி கடந்த 4 மாதங்களாக மனு அளித்து வருகிறேன்.

விருதுநகர் வரும் முதல்வரின் கவனத்தை ஈர்த்து நிரந்தர வேலை வழங்கும் வரை ஆங்காங்கே தர்ணா போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார். மாற்றுத்திறனாளி அலுவலர்கள் சரவணனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...