×

எம்எல்ஏ தங்கம் தென்னரசு, எம்பி நவாஸ்கனி பேச்சு

திருச்சுழி, பிப்.25:   திருச்சுழி நகர வளர்ச்சிக்காக  மாநில, மத்திய   அரசு நிதிகளை முறையாக பெற்று வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம் என எம்எல்ஏ தங்கம் தென்னரசு, எம்பி  நவாஸ்கனி கூறினர்.ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகரமாகவும், சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் திருச்சுழி திகழ்கிறது. இதன் உள்கட்டமைப்பு  மற்றும் வளர்ச்சி பணிகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் அனைத்து சமுதாய பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய திருச்சுழி நகர வளர்ச்சிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் நிகழ்ச்சி திருச்சுழியில் நடைபெற்றது.  திருச்சுழி ஒன்றிய சேர்மன் பொன்னுதம்பி தலைமை வகித்தார். திருச்சுழி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணகுமார் முன்னிலை வகித்தார். திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு,ம் ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் கலந்துகொண்டு திருச்சுழி நகர வளர்ச்சிக்காக  மாநில, மத்திய அரசு நிதிகளை முறையாக பெற்று வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம் என கூறினர்.
மேலும்  அரசியல் சாரா பிரமுகர்களும் கலந்து கொண்டு  திருச்சுழிக்குட்பட்ட பகுதியில்  அரசு கல்லூரி, தொழிற்பயிற்சி மையம், பஸ்நிலையம் உட்பட அடிப்படை வசதி செய்து தரவேண்டுமென கூறினர்

அதற்கு திருச்சுழி நகர வளர்ச்சிக்குழு உள்கட்டமைப்பு மூலம் அடிப்படை வசதிகளும் நிறைவேற ஒன்றிணைந்து  பணியாற்றிடுவோம் என எம்எல்ஏ தங்கம் தென்னரசு, எம்பி நவாஸ்கனி கூறினர்.இக்கூட்டத்தில் திருச்சுழி தாசில்தார் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் ப.பா.போஸ், கமலிபாரதி, திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தனபாண்டி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பிச்சைநாதன், பொதுக்குழு உறுப்பினர் செம்பொன்நெருஞ்சி சந்திரன், மாவட்ட கலை இலக்கிய துணை அமைப்பாளர் மைலி முத்துசாமி மற்றும் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : MLA Gold Thennarasu ,MB Nawaskani Talk ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...