×

சாத்தூரில் மது விற்ற இருவர் கைது

சாத்தூர்,பிப்.25: சாத்தூரில் மது விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுத்ல செய்தனர். சாத்தூர் அண்ணாநகர் இரும்பு கடை அருகில் வைத்து மதுவிற்ற சத்திரபட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம்(54) மற்றும் நகராட்சி பூங்கா அருகில் வைத்து மதுவிற்ற சாத்தூரை சேர்ந்த கருப்பசாமி பாண்டியன்(34) ஆகிய இருவரையும் சாத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...