×

விமான நிலையம் முதல் பல்கலை. வரை மாதிரி பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி, பிப். 25:  குடியரசு துணைத்தலைவர் வருகையையொட்டி விமான நிலையம் முதல் பல்கலைக்கழகம் வரையிலான பகுதிகளில் மாதிரி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி டிஜிபி பாலாஜி வஸ்தவா தலைமையில் நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை (26ம்தேதி) புதுச்சேரி வருகிறார். மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வெங்கையா நாயுடு வருகையின்போது அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக நேற்று மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.குடியரசு துணைத்தலைவர் நாளை காலை 10 மணிக்கு புதுச்சேரி வந்து இறங்கியதும் பல்கலைக்கழக விழா இடத்திற்கு அழைத்து செல்வதுபோல ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. 26 கார்கள் அணிவகுத்து இசிஆர் சாலை வழியாக சிவாஜி சிலை, கோட்டக்குப்பம் பகுதியில் சென்றது. அப்போது அவ்வழியாக செல்லும் வாகனங்களை வழிநெடுகிலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட ஒத்திகையும் காவல்துறையால் நடத்தப்பட்டன. அப்போது அவ்வழியாக செல்லும் ெபாதுமக்களுக்கு அறிவுரை கூறி சிறிதுநேரம் மாற்று பாதையில் செல்லும்படி போக்குவரத்து போலீசார் வழிகாட்டினர்.

Tags : Airport First University ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...