விழுப்புரம், பிப். 25: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாநில தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில தலைவர் அருணாசலம், முனுசாமி, முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆறுமுகம் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, அருண்குமார், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.