விழுப்புரம், பிப். 25: தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.