பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

விழுப்புரம், பிப். 25: தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்புதின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதில் கூடுதல் எஸ்பி சரவணக்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: