×

பெண் எஸ்ஐயின் கணவர் தற்கொலை

பல்லாவரம், பிப். 25: பொழிச்சலூர், அகத்தீஸ்வரர் நகர், வ.உ.சி தெருவை சேர்ந்தவர் டேனின் அல்பின் ஜோஸ் (30). டிரான்ஸ்போர்ட் நிறுவன சூபர்வைசர். இவரது மனைவி மேரிசினிமோள்.எஸ்ஐயாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில்  பணிபுரிந்து வருகிறார். பணிச்சுமை காரணமாக மேரிசினிமோள் மாதத்தில் 3 நாட்கள் மட்டுமே, வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த ஜோஸ் நேற்று வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின்படி பல்லாவரம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


Tags : Woman SI ,suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை