×

பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி

பெரும்புதூர், பிப்.25: ஜெயலலிதா பிறந்த நாளை முதல்வர் பழனிசாமி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளார். இதையொட்டி, பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை  முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் நயீம் பாஷா தலைமையில் நேற்று நடந்தது.துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜார்ஜ், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் மகளிர் குழுவினர் பலர் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்று  கொண்டனர். இதில் வாழ்வாதார திட்ட நிர்வாகிகள் ஏலன், அருணா, பானு, அமுல், அத்தீஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...