சென்னை: சென்னையை அடுத்த பொன்மார் பிரின்ஸ் வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரியின் 15ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பிரின்ஸ் டாக்டர் கே.வாசுதேவன் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் 7ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்வி குழுமங்களின் தலைவர் கே.வாசுதேவன் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் வா.விஷ்ணுகார்த்திக், வா.பிரசன்னா வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர்கள் மகாலட்சமி, சுந்தர் செல்வின் ஆகியோர் வரவேற்றனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் முருகேசன், தமிழ்நாடு முன்னாள் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் ஆகியோர் 600 மாணவர்களுக்கு பட்டங்களையும், ரேங்க் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கி பாராட்டினர்.