சென்னை: அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் கம்பெனிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் பாட்டில் குடிநீர் தயாரிக்கும் தனியார் கம்பெனி கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இங்கு 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வந்தனர்.இந்த கம்பெனி வருவாய் துறை அனுமதியின்றி இயங்குவதாக பெரும்புதூர் ஆர்டிஓ திவ்யக்கு புகார் வந்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர், விஏஓ, வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு கடந்த 7ம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்தனர்.அப்போது, அனுமதியின்றி பாட்டில் குடிநீர் தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அந்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்.