×

சென்ட்ரல்-மும்பை ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை,: சென்ட்ரல்-மும்பை இடையே இயக்கப்படும் மும்பை விரைவு ரயில் தாமதமாக இன்று புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னையில் இருந்து நேற்று இரவு 11.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்- மும்பை விரைவு ரயில் (11028) 9 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக இன்று காலை 9.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : announcement ,Mumbai ,Southern Railway ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...