×

கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடக்கிறது விவசாயிகள் கடன் அட்டை பெற சிறப்பு முகாம்

விருதுநகர், பிப். 21: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (பிப்.21) கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகள் மற்றும் இதர விவசாயிகள் அனைவரும் விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களை உரிய நேரத்தில் கொள்முதல் செய்திடும் வகையில் விவசாய கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் தேசிய வங்கிகள் மற்றும் மண்டல ஊரக வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாய கடன் அட்டைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே, விருதுநகர் மாவட்ட பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளும் மற்ற விவசாயிகளும் முகாமிம் பங்கேற்று கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் 2 புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் கடன் அட்டை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : Special Camp ,Collector ,
× RELATED திருச்சி சிறப்பு முகாமில் இருந்த...