×

செல்போன் பறித்த வாலிபருக்கு தர்மஅடி

ஆலந்தூர்: அரக்கோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் தினேஷ் (21), நேற்று முன்தினம் கிண்டி காந்தி மண்டபத்தில் இருந்து ஆவடி நோக்கி மாநகர பஸ்சில சென்று கொண்டிருந்தார். கிண்டி ரேஸ் கோர்ஸ் வழியாக சென்றபோது இவரது செல்போனை  அருகில் இருந்த வாலிபர் பறித்துக்கொண்டு தப்ப முயன்றார். சக பயணிகள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து கிண்டி காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர். விசாரணையில், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (21) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
* மதுரவாயல் ராஜிவ்காந்தி நகர் எம்ஜிஆர் மெயின் ரோட்டில் அடுத்தடுத்துள்ள மளிகை கடை, மருந்து கடை மற்றும் பெட்டி கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் ₹62 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
* புதுப்பேட்டை வெங்கடாசலம் நாயக்கர் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன் அகமது சித்திக் (23), நேற்று தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் கோவூர் அருகே பைக்கில் சென்றபோது சாலையோர தடுப்பு கம்பி மீது மோதி இறந்தார்.
* கொளத்தூர் ஜி.கே.எம் காலனி கட்டபொம்மன் தெருவை சேர்ந்த தேவகி (60), நேற்று மாலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர், தேவகி கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலிச் செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.
* புளியந்தோப்பு திருவிக நகரை சேர்ந்த முகமது பாரூக் (50) என்பவரின் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவி–்ல இருந்த 5000 மற்றும் 2 பவுன் நகையை திருடிச் சென்றனர்.

Tags : cell phone extortionist ,
× RELATED செல்போன் பறித்த வாலிபருக்கு தர்மஅடி