பழநியில் 3 பவுன் பறிப்பு

பழநி, பிப். 21: பழநி டவுன் சண்முகபுரத்தை சேர்ந்த முத்துக்குருசாமி மனைவி சுப்புலட்சுமி (60). இவர் நேற்று மாலை ரணகாளியம்மன் கோயில் அருகே மாவு அரைக்க நடந்து சென்றார் அப்போது பின்னால் டூவீலரில் வந்த இருவர் சுப்புலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரில் பழநி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இச்சம்பவம் பழநி மக்களிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: