×

4 பேர் படுகாயம்

அரூர், பிப்.21:  சேலம் அருகே வீராணம் தாதனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மூக்கன் மகன்கள் ஜெயக்குமார்(26), கார்த்தி(25), பரமசிவம் மகன் மோகன்ராஜ்(22), கிருஷ்ணன் மகன் கேசவன்(22). இவர்கள், நேற்று ஒரே பைக்கில் அரூர் பழையபேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பக்கமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, சேலம் நோக்கிச் சென்ற அரசு பஸ் மோதியதில் 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா