×

கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

தர்மபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 74 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 600க்கும் மேற்பட்ட ஏரிகளும் உள்ளன. நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்த போதும், ஏரிகளில் தண்ணீர் தேங்கவில்லை. இந்நிலையில், கோடைக்கு முன்பே வெயில் சுட்டெரிப்பதால், தர்மபுரி நகரையொட்டியுள்ள இலக்கியம்பட்டி ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து, தற்போது முற்றிலும் வறண்டு போய் காணப்படுகிறது. இந்த ஏரி வறண்டதால் இலக்கியம்பட்டி, அழகாபுரி, செந்தில்நகர், கருவூல காலனி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. கோடை மழை பெய்யாவிட்டால் கடந்தாண்டை போலவே, நடப்பாண்டிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா