×

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு 24ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

தர்மபுரி, பிப்.21: அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று ஆஜராகாததால் வரும் 24ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்து தர்மபுரி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த 2012ல் தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக, அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. உடல்நிலை பாதிப்பு காரணமாக விஜயகாந்த் ஆஜராக முடியாததால், நீதிபதி கந்தகுமார், வரும் 24ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். இதேபோல், 2015ல் தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில், விஜயகாந்த் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும், மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் விசாரணையையும், நீதிபதி கந்தகுமார் வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Tags : Vijayakanth ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...