×

பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, பிப்.21: காவேரிப்பட்டணம் அருகே, நெடுங்கல் கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(43), கூலி தொழிலாளி. உடல்நலம் சரியில்லாமல் இருந்த இவர், அங்குள்ள பாலத்தின் சுவர் மீது அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், காவேரிப்பட்டணம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்