×

கள்ளக்காதலி கொலை வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை

நாமக்கல், பிப்.21: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்த குப்புச்சிபாளையம் காமாட்சி நகரை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் இளங்கோவன்(27). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 2011ம் ஆண்டு கோவையில் பொக்லைன் டிரைவராக வேலை செய்து வந்தார்.  அப்போது கோவை சூலூரை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த காந்தாத்தாள்(35) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2011 மார்ச் 5ம் தேதி, பரமத்தி அருகே உள்ள மின்னாம்பள்ளி விராலிகுட்டையில் காந்தாத்தாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இளங்கோவன் தனது கள்ளக்காதலி காந்தாத்தாளை கொலை செய்து, அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை கொள்ளை அடித்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் இளங்கோவனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா,  காந்தாத்தாளை  கொலை செய்து நகை கொள்ளை அடித்த இளங்கோவனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags : murder ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...