×

காங். கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், பிப். 21: பெண்ணாடத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் வீரப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பொன்னுசாமி, மாவட்ட பொது செயலாளர் சரவணன், முன்னாள் வட்டார தலைவர் கந்தசாமி, மாநில எஸ்சி, எஸ்டி ஒருங்கிணைப்பாளர் காமராஜ், நகர செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் அசோக்ராஜ் வரவேற்றார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மணிரத்தினம், மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். சமையல் எரிவாயு விலை உயர்வு, இட ஒதுக்கீடு ரத்து செய்தல், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவைகளை கண்டித்து சிலிண்டர் மற்றும் தண்ணீர் கேன்களை கையில் ஏந்தியபடி மத்திய, மாநில அரசுகளை பதவி விலக கோரி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருமுட்டம் வட்டார தலைவர் தமிழ்வாணன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் வெங்கடேஸ்வரன், பொன்னுசாமி, ஐஎன்டியுசி அழகேசன், ரங்கநாதன், சீனிவாசன் தர்மலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது