×

ஆன்லைன் மூலம் பிப்.28க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

கரூர், பிப். 21: கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: என்சிவிடி பாடத்திட்டத்தின்படி புதிய தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்க பழைய தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழிற்பிரிவுகள் துவங்க விருப்பம் உள்ள நபர்கள், கல்வி நிறுவனங்கள் www.nimionilneadmission.in/iti எனும் மத்திய அரசு இணையதளத்தில் பிப்ரவரி 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். டைரக்டர் ஜென்ரல் ஆப் டிரெய்னிங் விதிகளின்படி, தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். இது குறித்து கூடுதல் விபரங்களக்கு கீழ்காணும் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.  தொலைபேசி எண் 044- 22501006, idetctsection@gmail.com இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்