×

கடவூர் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

கடவூர், பிப். 21:மாவத்தூர் ஊராட்சி பெருமாள்கோவில்பட்டியில் வெறிநாய்கள் கடித்து மூன்று வெள்ளாடுகள் பலியாகின. மாவத்தூர் ஊராட்சி பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் (60). இவரது வெள்ளாடுகளை வீட்டின் அருகே கட்டி வைத்து இருந்தார். இதில் வெறிநாய்கள் கூட்டம் புகுந்து மூன்று ஆடுகளை கடித்து குதறி கொன்றது. மற்றொரு ஆடு காயமடைந்தது. இதனை கேள்விப்பட்டு கால்நடை மருத்துவர் ஜெகதீஷ் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி, ஊராட்சி தலைவர் கீதா செந்தில், கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். இறந்த வெள்ளாடுகளின் மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் ஆகும்.

Tags : Kadavur ,
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில்...