தூத்துக்குடி,பிப்.21: தூத்துக்குடி நகர்புற செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (21ம்தேதி) நடை பெறுகிறது. எனவே இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், திரேஸ்புரம், பூபால்ராயபுரம், லூர்தம்மாள்புரம், அலங்காரதட்டு, மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளபட்டி, தருவைகுளம், பட்டிணமருதூர், மேலமருதூர், பனையூர், வாலசமுத்திரம், கி.குமாரபுரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.