×

பிதர்காடு பகுதியில் இரவு நேரத்தில் குறைந்தழுத்த மின் வினியோகம்

பந்தலூர், பிப்.21: பந்தலூர் அருகே பிதர்காடு சுற்று வட்டார பகுதிகளான சந்தகுன்னு, சோலாடி, பெரும்பள்ளி, முக்கட்டி, முதரகொல்லி, சூசம்பாடி, 18 குன்னு, ஆனப்பன்சோலை, மாணிவயல், ஸ்கூல்மட்டம், காமராஜர் நகர், பஞ்சோரா, கைவட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் 6000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்புகள் உள்ளது. கடந்த 3 வருடங்களாக இப்பகுதியில் குறைந்த மின் அழுத்தம் தொடர்ந்து நிலவி வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இது குறித்து ஏற்கனவே இருமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க இல்லை என தெரிகிறது.  மின் அழுத்தம் குறைவாக இருப்பதால் டிவி, மிக்சி, குளிர்சாதன பெட்டிகள், கிரைண்டர், கணினி மற்றும் பஞ்சாயத்து மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் மோட்டார்கள், தெருவிளக்குகள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மாலை 6 மணிக்கு மேல் 160 வாட் மின்சாரம் 80 வால்டாக மாறுகிறது. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் உதவி மின்பொறியாளர் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் சார்பில் நிஷாத் என்பவர் புகார் அனுப்பியுள்ளார்.



Tags : Bidharkadu ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு