கோவை, பிப்.21: கோவையில் வெவ்வேறு இடங்களில் வியாபாரி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மேட்டுப்பாளையம் அடுத்த ஊமைப்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (47). கூலித்தொழிலாளி. இவருடைய முதல் மனைவி சங்கரம்மாள்(35). இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணை துரைசாமி 2வதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 17ம் தேதி குடும்ப தகராறு காரணமாக சரஸ்வதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கம் தாளாமல் மனவேதனையில் இருந்து வந்த துரைசாமி நேற்றுமுன் தினம் அங்குள்ள முனியப்பன் கோயில் அருகே உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.