ஈரோடு, பிப்.21: ஈரோட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஈரோடு கலைமகள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை தாங்கினர். தேர்வு துறை உதவி இயக்குநர் யாமினி, கல்வி மாவட்ட அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதும் மாணவ, மாணவியர் தேர்வு பயத்தை போக்கி, தேர்வினை கொண்டாடும் விதமாக அவர்களுக்கு மன ரீதியான பயிற்சி அளிக்க வேண்டும்.