×

தடகளப் போட்டிகளில் கிரேஸ் கல்லூரி மாணவர்கள் சாம்பியன்

பவானி, பிப்.21: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் கோவை மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் கோவையில் நடந்தது. இதில், பவானி அருகே உள்ள எவலமலை கிரேஸ் கல்வியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம், ஈட்டி எறிதல் போட்டிகளில் முதலிடம் பெற்றனர். நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடமும், 400 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றனர். மேலும், தடகளப் போட்டிகளில் அதிகப் புள்ளிகள் பெற்றதன் மூலம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். முன்னதாக, ஈரோடு மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளிலும் அதிகளவில் வெற்றி பெற்றதால் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றிருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரித் தாளாளர் மதலைமுத்து, செயலாளர் வின்சென்ட் அமல்ராஜ், முதல்வர் மேரி ரீட்டா மார்டினா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.



Tags : Grace College ,
× RELATED கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்