×

அம்மன் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம்

ஈரோடு, பிப்.21: சித்தோடு அம்மன் கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டு துறை சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.கல்லூரியின் தாளாளர் ஜெயலட்சுமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் பாலகுமார் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேஷ் துணை முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் வரவேற்பு உரையாற்றினர். சிறப்பு விருந்தினராக ஈரோடு கலை அறிவியல் கல்லூரி கணினி துறை பேராசிரியர் சங்கரசுப்பிரமணியன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். கருத்தரங்கில், 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து கணினித்துறை இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். இறுதியில், கணினித்துறை பேராசிரியர் பூபதி நன்றி கூறினார்.

Tags : Seminar ,Amman College ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்