சூதாடிய 13 பேர் கைது

ஈரோடு, பிப்.21: ஈரோடு பெரியசேமூர் காவிரி நகர் 3வது வீதியில் சூதாட்டம் நடப்பதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்ட ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த வினோத்பாபு (40), அருண்குமார் (33), சாய்ராம் (32), பாலாஜி (22), விமல் (22), நெப்போலியன் உள்பட 13 பேரை கைது செய்ததோடு சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் வாடகைக்கு வீடு எடுத்து இங்கு பல நாட்களாக சூதாட்டம் நடைபெற்று வந்தது தெரியவந்தது.

Related Stories: