×

போலீஸ் தடியடியை கண்டித்து மதுக்கூரில் இஸ்லாமியர்கள் 5வது நாளாக தொடர் போராட்டம்

பட்டுக்கோட்டை, பிப். 21:
சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூரில் மார்க்கெட் ரோட்டில் உள்ள பெரிய பள்ளிவாசல் அருகில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கடந்த 16ம் தேதி காலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக 5வது நாளான நேற்று நடந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது செல்போன்களில் உள்ள டார்ச்லைட்டை அடித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Tags : Islamists ,Madukkur ,
× RELATED உலகம் முழுவதும் ரமலான் நோன்பு தொடக்கம்