×

உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை குடிசை மாற்று வாரிய திட்டத்தின்கீழ் குடியிருப்புகள் வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் மனு

தஞ்சை, பிப். 21: குடிசை மாற்று வாரிய திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளை வழங்காததை கண்டித்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதையடுத்து நேற்று கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் திரண்டனர். அவர்களிடம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என போலீசார் கூறினர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தாமல் தங்களது கோரிக்கை சம்பந்தமான மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மீனாட்சியிடம் கொடுத்து விட்டு சென்றனர்.

Tags : Petitioners ,apartments ,
× RELATED தாந்தோணிமலையில் சிறுவர் பூங்காவை...