பொதுமக்கள் அச்சம் குழு பணம் கேட்டு பெண் மிரட்டல் நிதி நிறுவன ஊழியர் மீது புகார்

கும்பகோணம், பிப். 21: கும்பகோணத்தில் குழு பணம் கேட்டு பெண் மிரட்டப்பட்டார். இதுகுறித்து போலீசில் நிதி நிறுவன ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.கும்பகோணம் அடுத்த தி.மாங்குடி மேலத்தெருவை சேர்ந்த அழகர்ராஜ் மனைவி அன்புமொழி (34). இவர் தனது கணவரின் தொழிலுக்காக ரூ.10 ஆயிரத்தை தான் உறுப்பினராக உள்ள குழுவில் கடன் வாங்கி கொடுத்தார். வாங்கிய பணத்தை நிதி நிறுவன விதிமுறைப்படி செலுத்தி வருகிறார். இந்நிலையில் குழுவின் தலைவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து உடனே அன்புமொழி தனது கணக்கை முடித்து விட்டு கடன் வாங்கியதற்காக தான் அளித்த ஆவணங்களை கேட்டுள்ளார்.ஆனால் நிதி நிறுவன ஊழியர், குழுத்தலைவர் ரூ.13 ஆயிரம் பாக்கி வைத்துள்ளார். அந்த தொகையை கட்டினா ல்தான் ஆவணங்களை தருவேன் என்றார். மேலும் அன்புமொழியின் கடையை அடித்து நொறுக்கி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் அன்புமொழி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: