×

நாகர்கோவிலில் மின் கம்பங்கள் மீது மோதி கடைக்குள் புகுந்த சரக்கு லாரி

நாகர்கோவில்,  பிப்.21: நாகர்கோவிலில் நேற்று அதிகாலையில் மின்கம்பங்களை மோதி தள்ளிவிட்டு சரக்கு லாரி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியது. திருநெல்வேலியில் இருந்து கேரளாவுக்கு சர்க்கரை பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்றுகொண்டிருந்தது. அதிகாலை 3 மணியவில் நாகர்கோவில் ஒழுகினசேரி அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் ஓடியது. இதில் சாலையோரத்தில் நின்றிருந்த இரண்டு மின்கம்பங்கள் மீது மோதி சாய்ந்தது. இதில் மின்கம்பங்கள் உடைந்தன. தொடர்ந்து லாரி சாலையோரத்தில் இருந்த கடையில் பலத்த சத்தத்துடன் மோதி நின்றது.இதில் கடையின் முன்பக்க ஷட்டர் உடைந்து நொறுங்கியது. அருகில் இருந்த தடுப்பு சுவர்களும் உடைந்தன. அதிகாலை நடந்த இந்த விபத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடையின் உள்ளே இருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளன. தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வருகை தந்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...