×

தண்டவாள பராமரிப்பு பணிகள் இரணியல் - நாகர்கோவில் இடையே ரயில் போக்குவரத்தில் மாற்றம்

நாகர்கோவில், பிப்.21: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு:திருவனந்தபுரம் - நாகர்கோவில் பிரிவில் இரணியல் - நாகர்கோவில் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இவ்வழித்தடத்தில் பிப்ரவரி 21 முதல் மார்ச் 17ம் தேதி வரை (புதன்கிழமைகள் தவிர) ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில் எண் 19577 திருநெல்வேலி - ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் 40 நிமிடங்கள் இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்திவிடப்படும். திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 17ம் தேதி வரை இது அமலில் இருக்கும்.

ரயில் எண் 19423 திருநெல்வேலி-காந்திதாம் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் வியாழக்கிழமைகளில் வரும் 21 முதல் மார்ச் 17 தேதி வரை வியாழக்கிழமைகளில் நிறுத்திவிடப்படும். ரயில் எண் 16723 சென்னை எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் அல்லது இரணியலில் வரும் 21 முதல் மார்ச் 17 வரை (புதன்கிழமைகள் தவிர) நிறுத்திவிடப்படும்.ரயில் எண் 16525 கன்னியாகுமரி - பெங்களூரு எக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள் நாகர்கோவில் அல்லது இரணியலில் 21ம் தேதி முதல் மார்ச் 17 வரை புதன்கிழமைகள் தவிர இதர நாட்களில் நிறுத்திவிடப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை