×

மார்ச் 16ல் நடத்த விவசாயிகள் முடிவு தா.பழூரில் சிறப்பு கிராமசபை கூட்டம்

தா.பழூர், பிப்.20: தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாலதி அகியோர் கலந்து கொண்டனர். வேளாண் உதவி அலுவலர் சிவக்குமார் கூறுகையில், விவசாயிகள் கடன் அட்டை பெறுவது குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களிடம் கூறினார். இதன் சிறப்பு அம்சங்களாக விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை ஒரே நேரத்தில் பெற, வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாய கடன் பெற்றிட, விதைகள் உரங்கள் பூச்சிக்கொல்லிகள் வாங்க நிதி உதவி பெற்றிட. கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு வங்கி கடன் பெற இந்த அட்டை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த அட்டையை 5 வருடம் வரை பயன்படுத்தலாம் என்றும் பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கூறினார்.

Tags :
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...