×

பைக்கில் நெடுஞ்சாலையை கடந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிரைவர்கள் 2 பேர் பலி

பெரம்பலூர், பிப்.20: பெரம்பலூர் அருகே பைக்கில் சென்ற நெல் அறுவடை இயந் திர டிரைவர்கள் 2பேர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முற்பட்டபோது, அடையா ளம் தெரியாத வாகனம் மோதி பலியாகினர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஆய்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துக் கண்ணு என்பவரது மகன் இளவரசன் (23). கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுக்கா, அமங்களத்தூர் முருகன் என்பவரது மகன் ரஞ்சித்(24). இருவரும் நெல்அறுவடை இயந்திர ஓட்டுநர்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆய்குடியிலிருந்து, பெரம்பலூர் க லெக்டர் அலுவலகம் அருகே நெல் அறுவடைப் பணிக்கு செல்வதற்காக பைக்கில் புறப்பட்டு வந்துள்ளனர். அரியலூர் பெரம்பலூர் சாலை வழியாக 4 ரோடு வரை வந்தவர்கள், பிறகு சர்வீஸ் சாலை வழியாக, துறைமங்கலம் வந்து, நள்ளிரவு 12.30 மணியளவில் ஏரிக்கரைக்கும், நெடுவாசல் பிரிவு ரோட்டிற்கும் இடையே உள்ள சென்டர் மீடியன் வழியாக எதிர்புறம் உள்ள கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு செல்வதற்காக நெடுஞ்சாலையை கிழக்கிலிருந்து மேற்காக கடந்தனர். அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக் கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போயினர். சம்பவம் குறி த்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி,பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனை க்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...