தஞ்சை, பிப். 20: தஞ்சை பகுதியில் தஞ்சாவூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சித்தார்த்தன் தலைமையில் தஞ்சை தொழிலாளர் உதவி ஆணையர் கவி அரசு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர் பிரபாகரன், குழந்தைகள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் குணமதி, சைல்டு லைன் உறுப்பினர் சத்யராஜ், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மாரியம்மாள், ராஜராஜன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தங்கபாண்டி, சரவணன், மகாலட்சுமி, கீதா ஆய்வு செய்தனர். அதன்படி தஞ்சை கரந்தை தற்காலிக பேருந்து நிலையம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், காசுகடைத்தெரு ஆகிய பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் ஒர்க் ஷாப், மார்டன் ரைஸ் மில்லில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் காசுக்கடைத் தெருவில் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் 30க்கும் மேற்பட்ட பட்டறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.