தஞ்சாவூர், பிப். 20: தஞ்சை பிஎல்ஏ சிதம்பரம் மஹாலில் பன்னாட்டு சங்கங்கள் மாவட்டம் 324 ஏ2 மண்டலம் 4-ன் மருது மண்டல சந்திப்பு நடந்தது. மண்டல தலைவர் ஏஎஸ் பெரியமருது தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் கார்த்திக் பாபு மண்டல சந்திப்பை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக புலவர் ராமலிங்கம், முன்னாள் ஆளுநர் ஷேக்தாவூத், சேதுகுமார், சோமா ராஜரத்தினம், குணசீலன், ராஜேந்திரன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். செயலாண்மைக்குழு தலைவர் வசந்தகுமார் வரவேற்றார். தஞ்சாவூர் பிரின்ஸ் லயன்ஸ் சங்க டாக்டர் ஸ்டாலின், மாவட்ட ஆளுநர் கார்த்திக் பாபுவை அறிமுகப்படுத்தினார்.