வாகன ஓட்டிகள் அவதி அரசு கல்லூரி மாணவர்களின் என்எஸ்எஸ் முகாம் துவக்கம்

கும்பகோணம், பிப். 20: கும்பகோணம் அடுத்த பெரும்பாண்டி ஊராட்சியில் அரசு ஆடவர் கல்லூரி சார்பில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம் தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் (பொ) ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் பாஸ்கர், துணைத்தலைவர் புவனேஸ்வரி செந்தூரன், என்எஸ்எஸ் திட்ட அலுவலர் முருகன் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர்கள் சுவாமிநாதன் வரவேற்றார். முகாமை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். தூய்மைக்காக இளைஞர்கள் என்ற நோக்கத்தில் வரும் 25ம் தேதி வரை முகாம் நடக்கிறது. இதில் பெரும்பாண்டி ஊராட்சி குடியிருப்பு பகுதிகளில் துாய்மைப்பணி, கண்தான விழிப்புணர்வு பேரணி, பல் பாதுகாப்பு முகாம், உயிர்காக்கும் கலை பயிற்சி, உணவு உடலும் போன்ற பல்வேறு விழிப்புணர்வு, ஊராட்சி முழுவதும் சுகாதார பணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Related Stories: