ஒரகடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட குண்ணவாக்கம் ஊராட்சி கடைகோடியில் உள்ளது. ஓரகடம் போலீசார் அங்கு பணியில் ஈடுபட வேண்டுமானால், சுமார் 10 கிமீ தூரம் செல்ல வேண்டும். இதனால், இங்கு இரவு நேரத்தில் ரோந்து செல்வதற்கு போலீசார் தயக்கம் காட்டுவதாக, சக போலீசாரே கூறுகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகமும், எஸ்பியும் உடனடியாக காவல்நிலையத்தில் ஆய்வு செய்து, போலீசாருக்கு ஆலோசனை (கவுன்சலிங்) வழங்கி, ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.