×

விருதுநகரில் குண்டும், குழியுமான எம்ஜிஆர் ரோடு

விருதுநகர், பிப். 20: விருதுநகரில் குண்டும் குழியுமான எம்ஜிஆர் ரோட்டை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விருதுநகர் நான்குவழிச்சாலையில் இருந்து புதிய பஸ்நிலையம் வரும் எம்ஜிஆர் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் பகல், இரவு நேரங்களில் ஊருக்குள் பஸ்கள் வராமல் புறக்கணித்து செல்வதாக பயணிகள் தெரிவித்தனர். விருதுநகர் புதிய பஸ் நிலையத்திற்கு நீண்ட தூர பஸ்கள் வராமல் புறக்கணித்து செல்வதை தடுப்பதாக நான்கு வழிச்சாலையில் இருந்து பஸ்கள் வந்து செல்ல எம்ஜிஆர் சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைத்தும் விருதுநகர் பைபாஸ் ரைடர், பாயின்ட் டூ பாயின்ட் பஸ்கள் புறக்கணித்து சென்றாலும், சாதாரண பஸ்கள் கூட நகருக்குள் வருவதற்கும், விருதுநகர் பயணிகளை ஏற்றவும் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நான்கு வழிச்சாலையில் இருந்து விருதுநகர் புதிய பஸ் நிலையத்திற்கு வரும் எம்ஜிஆர் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் பல பஸ்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. சாலையில் இருக்கும் குழிகள் பஸ்களை கவிழ்த்து போடும் அளவிற்கு மெகா பள்ளங்களாக இருக்கின்றன. நகராட்சியால் பராமரிப்பு செய்யப்படும் எம்ஜிஆர் சாலையை முதல் கட்டமாக பஞ்சர் பார்க்கவும் அதை தொடர்ந்து தரமாக போட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : MGR Road ,Virudhunagar ,
× RELATED ஜிஎஸ்டி கொங்கு மண்டலத்தை...