×

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.42 லட்சம்

சாத்தூர், பிப். 20: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.42 லட்சம் கிடைத்தது. தென் தமிழகத்தில் புகழ் பெற்ற அம்மன் கோயில்களில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். அதனை தொடர்ந்து நேற்று தை கடைசி வௌ்ளி திருவிழாவிற்கு வைத்திருந்த தற்காலிக உண்டியல் இரண்டு, ஒரு கால்நடை உண்டியல். 10 நிறந்தர உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கீடப்பட்டன.
அதில் ரொக்கமாக ரூ.42 லட்சத்து 18 ஆயிரத்தி 540 பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை கோயிலின் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

தங்கம் 120 கிராம் 600 மில்லி, வௌ்ளி 416 கிராம் 100 மில்லி கிடைத்தது. பணம் எண்ணிக்கையில். சாத்தூர், துலுக்கப்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் கோயில் ஆணையர் கணேசன், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலர் ராமமூர்த்தி பூசாரி, அறங்காவலர் குழுவினர் மற்றும் ஆய்வாளர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Tags : Irangankudi Mariamman temple ,
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...