×

பெண் போலீசுக்கு வரதட்சணை கொடுமை கணவர் மீது வழக்கு

தேனி, பிப். 20: பெண் போலீசிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனி மாவட்டம், க.விலக்கு போலீஸ் குடியிருப்பில் குடியிருப்பவர் தம்பித்துரை மனைவி வனிதா(33). இவர் க.விலக்கு போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவருக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்த நிலையில், கணவர் தம்பித்துரை கேட்டுக்கொண்டதால் மீண்டும் கணவருடன் வனிதா சேர்ந்து குடும்பம் நடத்தினார்.

இந்நிலையில் திருப்பூருக்கு வேலைக்கு போவதாக சொல்லிவிட்டு சென்ற தம்பித்துரை வேறு ஒரு பெண்ணுடம் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதுகுறித்து நியாயம் கேட்ட பெண்போலீஸ் வனிதாவிடம், அவரது கணவர் தம்பித்துரை அவரது உறவினர்கள் தூண்டுதலில் அசிங்கமாக பேசியதோடு, ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதுகுறித்து வனிதா ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். இவரது புகாரின்பேரில் போலீசின் கணவர் தம்பித்துரை, அவரது உறவினர்கள் லட்சுமி, அமராவதி, கருப்பையா, ராஜா, அஞ்சுகம், ஐஸ்வர்யா, அனுசுயா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : victim husband ,
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்