×

ஏர்வாடி பகுதியில் கள் விற்ற 3 பேர் கைது 150 லிட்டர் பறிமுதல்

கீழக்கரை, பிப்.20:  ஏர்வாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனங்கள் விற்ற 3 பேர்கள் கைது செய்யப்பட்டனர். 150 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஏர்வாடி மற்றும் புதுமாயாகுளம், தொத்தன் மகன்வாடி ஆகிய இடங்களில் தடை செய்யப்பட்ட பனங்கள் விற்பனை செய்வதாக கீழக்கரை டி.எஸ்.பி முருகேசனுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது தலைமையில் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் மூன்று இடங்களிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் புதுமாயாகுளத்தில் கள் விற்பனை செய்த கருப்பையாவை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த கள்ளை பறிமுதல் செய்தனர்.

ஏர்வாடியில் கள் விற்பனை செய்த சண்முகராஜ் என்பவரை கைது செய்து, அவர் வைத்திருந்த கள்ளையும் பறிமுதல் செய்தனர். மேலும் ஏர்வாடி அருகே தொத்தன் மகன்வாடியில் கள் விற்பனை செய்த சந்திரனை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த கள்ளை பறிமுதல் செய்தனர். மூன்று பேரிடம் இருந்தும் பறிமுதல் செய்த 150 லிட்டர் கள் அழிக்கப்பட்டது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை