தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி, பிப்.20: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (21ம்தேதி) மாலை 5 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் நானும், தலைமை கழக பிரதிநிதி சோமுவும் சிறப்புரை ஆற்றுகிறோம். கூட்டத்தில் திமுக 15வது அமைப்பு தேர்தல் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி பேரூர் கழக செயலாளர்கள் மாவட்ட அணி அமைப்பாளர்கள் கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: