திருச்செந்தூர் நகர கூட்டுறவு வங்கி வளர்ச்சி நிதி, கல்வி நிதி வழங்கல்

திருச்செந்தூர், பிப்.20: திருச்செந்தூர் நகர கூட்டுறவு வங்கி சார்பில் கூட்டுறவு ஆராய்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கியின் லாபத் தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி நிதி, கல்வி நிதி 2018-2019க்கான தொகை ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 125க்கான காசோலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் செல்வி வடமலைப்பாண்டியன் தலைமை வகித்தார். வங்கியின் தலைவர் கோட்டைமணிகண்டன் காசோலையை மாவட்ட ஒன்றிய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் அந்தோணிபட்டுராஜிடம் வழங்கினார்.

இதில் வங்கியின் துணைத்தலைவர் ஜான்எக்ஸ்டர் லோபோ, வங்கியின் இயக்குநர்கள் ஆனந்தவல்லி, கஸ்தூரி, ஆயிஷா, வேல்குமார், மு.கணேசன், ஆ.கணேசன், முத்துக்குமார், பெனடிக், வங்கியின் துணைப்பதிவாளர் வளர்மதி, அதிமுக தொகுதி முன்னாள் செயலாளர் வடமலைப்பாண்டியன், நகர செயலாளர் மகேந்திரன், சுதர்சன் வடமலைப்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் செல்வன், சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை வங்கியின் பொது மேலாளர் மாரியப்பன், வங்கிப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: