கொடைக்கானலில் மது விற்றவர்கள் கைது

கொடைக்கானல், பிப். 20: கொடைக்கானல் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பது குறித்து பொதுமக்கள் அவ்வப்போது போலீசாரிடம் புகார் செய்து வருகின்றனர். அதன்பேரில் கொடைக்கானல் போலீசார் தீவிர தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  கொடைக்கானல் பள்ளங்கி ரேஷன் கடை அருகில் மாட்டுபட்டியை சேர்ந்த முருகன் (35), பெருமாள்மலை பகுதியில் தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ராஜா (35) ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: