திண்டுக்கல்லில் உவேசா பிறந்ததினம் கொண்டாட்டம்

திண்டுக்கல், பிப். 20: திண்டுக்கல்லில் மாவட்ட காமராஜர், சிவாஜி தேசிய பேரவை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் சத்ரபதி வீரசிவாஜியின் 391வது பிறந்த தினம், தமிழ் தாத்தா உவே.சாமிநாதையரின் 166வது பிறந்த தினம், தில்லையாடி வள்ளியம்மையின் 123வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பேரவை இளைஞர் பிரிவு தலைவர் சஞ்சய் குமார் தலைமை வகிக்க, கிழக்கு மாவட்ட சிவாஜி மன்ற செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். மாநகர துணைத்தலைவர் தவசி நாகராஜன் வரவேற்க, அரசியல் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். விழாவில் 3 பேரின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மாநகர செயலாளர் பத்மநாபன் நன்றி கூறினார். ஏற்பாட்டினை மாவட்ட நிறுவனர் வைரவேல் செய்திருந்தார். முன்னதாக புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Related Stories: