ஒட்டன்சத்திரம், பிப். 20: ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்பு மீண்டும் நிழற்குடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு தினமும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் பஸ்களிலே வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையை ஒட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவிகள் வசதிக்காக தாராபுரம் சாலையில் அரசு மருத்துவமனை முன்பு ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது சாலை விரிவாக்க பணிக்காக இந்த நிழற்குடையை அகற்றி விட்டனர்.